Saturday, December 15, 2007

சுவிஸ் அரசியலில் அதிரடிப் பெண்.

சுவிற்சர்லாந்தின் சக்திமிக்க அரசியல் தலைவராக இருந்த, தீவிர வலதுசாரித் தலைவரான திரு.கிறிஸ்தோவ் புளொக்கரை, அதே கட்சியைச் சார்ந்த திருமதி எவ்லின் விட்மர் ஸ்லும்ப், புதிய கூட்டாட்சி அமைச்சரவைக்கு தான் தெரிவு செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டதன் மூலம், சுவிஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்.

வாக்கெடுப்பில் புளொக்கர் 115 வாக்குகளையும், எவ்லின் 125 வாக்குகளையும், பெற்றிருந்த நிலையில், தனது தெரிவை ஏற்றுக்கொள்வது குறித்த இறுதி முடிவை 13.12.07 காலை 8.00 மணிக்குத் தெரிவிப்பதாகச் சொல்லியிருந்த திருமதி. எவ்லின் விட்மர், நாட்டின் முக்கிய பதவிக்குத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு நன்றி கூறி, தனது தெரிவினை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இவரது அறிவிப்பினை பாராளுமன்றினுள் உறுப்பினர்களும், மன்றின் வெளியே அதிகாலை முதல் திரண்டிருந்த ஆதரவாளர்களும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.


கடந்த காலங்களில் சுவிஸ் அரசியலில் மிகச் சக்திவாய்ந்த தலைவராக விளங்கிய திரு. கிறிஸ்தோவ் புளொக்கர் " தன்னை சுவிஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றியிருக்கலாம், ஆனால் சுவிஸ் அரசியலில் இருந்து வெளியேற்ற முடியாது " என, ஊடகவியலாளருக்குத் தெரிவித்துள்ளார்.


தெரிவு செய்யப்பட்டுள்ள திருமதி: எவ்லின் விட்மர் மூன்று பிள்ளைகளுக்குத் தாய். ஏழுபேர் கொண்ட மத்திய கூட்டாட்சி அமைச்சரவையில், சுவிஸ் அரசியலில் முதற்தடவையாக மூன்று பெண்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


திருமதி. எவ்லின் விட்மரின் ஏற்புரையைக் காணொளியில் காண

3 comments:

Anonymous said...

33% ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
பெட்டி வாங்கிவிட்டதாக கூறமாட்டார்கள் தானே!!!

மலைநாடான் said...

அநானி, யோகன்! வருகைக்கு நன்றி. யோகன் இது தொடர்பான விரிவான பார்வையொன்றினைத் தர உத்தேசம். சற்றுப் பொறுத்திருங்கள். நன்றி.