Wednesday, December 06, 2006

ஒன்றாய் எல்லோரும்...

இது ஓர் இத்தாலியக் கவிஞரின் கவிதை என்பது மட்டுமே தெரியும். கவிஞர் பற்றிக் கூட ஏதும் நான் அறிந்திருக்கவில்லை. தன் பாடசாலையில் பன்மொழிபற்றிய அறிமுகத்துக்காகவும், வெளிநாட்டவர் தொடர்பான கருத்தியலாக்கதிற்குமான, நிகழ்வொன்றில் காட்சிப்படுத்துவதற்காக, தன் தாய்மொழியான தமிழ்மொழியில் இக்கவிதையை மொழிபெயர்க்க என் உதவியை நாடிவந்தாள் எங்கள் சிறுமி ஒருத்தி. கவிதை நன்றாக இருந்ததால் உங்களுடனான பகிர்தலுக்காக இங்கே...



Fossiamo tutti...
di Ignazio Drago


Fossiamo tutti cosi vicino,
uomini e bambini,
da girare spalla a spalla,
rayya bianca,nera e gialla:
tutti insieme sul prato del mondo,
in un grande girotondo,
di tanti colori innocenti
faremmo un colore soltanto,
di tanti diversi accenti
un unico canto;
Piu nessuno sarebbe straniero:
palpiterebbe davvero,
nell’ansia di ogni cuore,
lo stesso messaggio d’amore.

Photobucket - Video and Image Hosting


ஒன்றாய் எல்லோரும்..
எழுதியது: இன்னியாற்சோ ட்ராகோ


வெள்ளை கறுப்பு மஞ்சள் என்றெண்ணாது,
பெரியோர் சிறியோர் அனைவரும் ஒன்றாய்,
தோளொடு தோள் சேர்த்து,
உலகப்பூங்காவின் பெரும் பரப்பில்
பூ வட்டம் விளையாடும் போது,
உணர்வோம்,
அனைவரும் ஓர் நிறமென.
அவ்வேளை,
இதயங்கள் இணைந்து,
அன்பின் மிகுதியால் உண்மை பாடும்,
யாரும் அந்நியர் இல்லையெனும்
செய்தி சொல்லி.

2 comments:

Anonymous said...

அப்பூவட்டத்தில் எல்லோரும் ஒன்றாய்
இருந்தது விளையாடுவோம்,எப்பொழுது?
மனிதம் எனும் பூக்கள் எம் எல்லோரினதும் மனதில் மலரும் போது,அத்தருணத்திற்காக காத்திருப்போம்.

Anonymous said...

மலைநாடர்!
வெள்ளை நிறத்தோரு பூனை-எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்!
பிள்ளைகள் பெற்றதப் பூனை-அவை
பேருக் கொருநிறமாகும்
சாம்பல் நிறமொருகுட்டி-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்-அவை
.......................
யாவும் ஒரே தரமன்றோ?
.......................
வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால்-அதில்
மானுடர் வேற்றுமையில்லை.
இக்கவிஞர்!
பாரதியாரின் கவிதை படித்திருப் பாரோ???
ஏன் கூடாது.
உங்கள் நல்ல முயர்ச்சி!!!மொழியைப் மேலும் மேலும் புரிய
யோகன் பாரிஸ்