Wednesday, December 25, 2013

வரமெனக்கு வாய்த்திட வேண்டும் !



கால நகர்வின் வேகத்தில் மறைந்து வரும் பழக்கங்களும் அதிகரிக்க, வாழ்வியலின் வழக்கங்கள் அருகி, இயல்பு வேகமாக மாறிவருகிறது.
 ஒரு காலத்தில் அவசியமாகக் கருதப்பட்ட விடயங்கள், அல்லது விருப்பத்திற்குரிய விடயங்கள் இப்போ வேண்டத்தகாதன ஆகிவிட்டன. அடுத்த தலைமுறை அநேக விடயங்களைக் குறிப்புக்களின் பதிவுகளிலேயே வாசித்தறிய வேண்டியிருக்கும். இது இயல்புதானென ஏற்றுக் கொண்டாலும், இம் மாற்றத்தில் சில வாழ்வாதாரத் தொழில் முனைவுகள் முடங்கிப் போவதும், அதனை நம்பி இருக்கும் மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகிப் போவதும் வருத்ததிற்குரியது.
 "ஆனந்தி" சஞ்சிகையை ஐரோப்பிய அச்சுத்தரத்தில் வெளியிடத் தொழில் சார் முறையில் உதவிய அச்சக நண்பர்களை, கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்னதாகச் சந்தித்து வாழ்த்துச் சொல்லிவரச் சென்றிருந்தேன். வருட இறுதியில் பரபரப்பாக இருக்கும் அந்தப் பாரிய அச்சகம், ஆளரவமற்றுக் கிடந்தது. அங்குமிங்கம் வேகமாகச் சுழன்று திரியும், தொழிலாளர்கள் தொகை சரிபாதிக்கும் மேலாகக் குறைந்திருந்தது.
புதிய வடிவங்களிலும், வண்ணங்களிலும், நாட்குறிப்புக்களும், நாட்காட்டிகளுமாக நிறைந்திருக்கும் அந்தக் கூடம் வெறிச்சோடிப்போயிருந்தது. முதலாளியாகவும், தொழிலாளியாகவும், குடும்ப உறுப்பினர்களுடன் அந்தப் பதிப்பகத்தை நடத்திவரும் நண்பன், வேதனையின் ரேகைகளை அகத்தினுள் மறைத்து, முகம் சிரித்து வரவேற்றான்.
 கைகுலுக்கிக் கட்டியணைத்தவனிடம் "என்னாச்சு...?" என்றேன்.
 "காலம் மாறிப் போச்சு... " என்றான்.
ஐரோப்பியப் பொருளாதார மந்த நிலைத் தொழில் முடக்கமாக இருக்குமெனும் என் எண்ணத்தினை மாற்றி, யோசிக்க வைத்தது அவன் பதில். யோசித்துப் பார்க்கின்றேன்.. தொடர்ந்து வாசிக்க..இங்கு அழுத்துங்கள்

No comments: