![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvto3osHzN09ozO27ION6d2Wq2vwCdY0eA20mwzTvW8kUH39R2VM-R4K1Y3mMCX74EtEA1Lvujz4MMQ6Nu45HXCmabDyswTJqpSerzsvst8Dm0Bya3sTJLS8_KVfaTEgrGoAMPXg/s320/thamilselvan.jpg)
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் துறைச் செயலர் பிரிகேடியர்: சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து, சர்வதேச ஊடகங்களில் செய்திகளும், நோக்குகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன. சுவிஸ் இத்தாலிய மொழிக்கான அரசுசார் வானொலி Rete Uno இன்று மதியம் வழங்கிய செய்தியில் அன்னாரது மறைவு குறித்து, முக்கியத்துவம் வழங்கி வெளியிட்ட செய்தித் தொகுப்பில்:
சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சில், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் ஏனைய ஐந்து போராளிகளுடன் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக, உலகெங்கும் வாழும் தமது மக்களுக்கு அறியத் தந்துள்ளது. இதனை சிறிலங்கா அரசும் உறுதிசெய்துள்ளது.
தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக, சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் கோரிக்ககைகளை மிக நிதானமாக வெளிப்படுத்தியவர் தமிழ்ச்செல்வன். கடந்த வருடம் தோல்வியில் முடிந்த ஜெனிவாப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
சராசரி மக்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர், அதன்மூலம் அவர்களது குறைகளை, தேவைகளை, பேச்சரங்குகளில் கொணர்ந்தவரென, தமிழ்மக்களினால் பாராட்டப்பட்டவர் எனச் சொல்லப்படும், இவரது மறைவு குறித்து பாதுகாப்புத் துறைசார்ந்து சிறிலங்காஜனாதிபதியின் சகோதரர் கருத்துக் கூறுகையில், " இவ்விதம் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒவ்வொருத்தராக நிச்சயம் அழிக்கப்படுவார்கள் " எனத்தெரிவித்துள்ளார்.
சமாதான காலத்தில் சுமார் 5000 பேரளவில் கொல்லப்பட்டிருக்கும் சிறிலங்காவில் , இதன்பின்னான சமாதான நடவடிக்கைகள் கேள்விக்குரியதாகவும், நம்பிக்கையற்தாகவும் காணப்படுகிறது.
வானொலிச் செய்தியின் மூலவடிவம்:
அரசியற்துறைச் செயலர் பிரிடிகேயர்: சு.ப.தமிழச் செல்வன் அவர்களுக்கும், ஏனைய போராளிகளுக்கும் எமது அஞ்சலிகள்.