Saturday, January 25, 2014

இந்த நாள் இசையின் நாள்


பனிப்பொழிவு, பரபரப்பான பயணங்கள், பணிநெருக்கடி என்பவை விட்டுவிலகி, வீட்டில் நிற்கமுடிந்த இன்றைய பொழுது சுகமானது.
காலைச் சூரியனின் கதிரொளி மனதுக்கும் உடலுக்கும் தந்தது மகிழ்வான உற்சாகம். பிரியத்துக்குரிய நாய்குட்டியுடன் விளையாடி, பிடித்தாகப் பூங்கன்றுகளுக்கு நீர் வார்த்து, இணையம் மேய்கையில், எங்கெங்கும் மனம் விரும்பும் இசையின் தொடுப்புக்கள்.

மலேசியாவிலிலுந்து கேரளம் பாடலைக் கேட்டு லயித்து, இங்கே பகிர்ந்து முடிக்கையில்,  " புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன்... " இமானின் இசையில் மதன் கார்க்கியின் வரிகள், வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் வந்து ஒலிக்கிறது.

1 comment:

Anonymous said...

இன்பநாள்