
நமது பிள்ளைகளின் மகிழத் தக்க செயல், மனதுக்குள் திரும்பத் திரும்ப மலர்ந்து மகிழ்ச்சி தரும். அது போலவே எமக்குப் பிடித்தமான படைப்பாக்கமும். அன்மையில் அப்படி ஒரு நிறைவைத் தந்தது இந்த ஒலிப்பதிவு.
அம்மாவைப் பற்றி ஒரு பத்து வயதுச் சிறுமியின் இயல்பான கவிதை. கிராமிய வார்த்தைகளில் தாய் குறித்த ஒரு பாடல். அன்னையின் புகழ் பாடும் ஒரு நவீன இசைப் பாடல். இவை ஒவ்வொன்றும் ஒவ்வாரு சந்தர்ப்பங்களில் கேட்டவை. இந்த ஒலிப் பத்தியை உருவாக்க யோசித்த போது ஒன்றோடொன்று இசைந்து வந்தது.
கவிதை ஒரு ஈழத்துச் சிறுமி, கிராமியப்பாடல் தமிழகத்துப் பாடகன், நவீன இசைப்பாடல் மலேசியக் கலைஞன். இந்த மூன்று தமிழையும், இசையோடு கோர்வையாக்கிய போது, இந்த ஒலிப்பத்தி ஒரு முப்பரிமானத் தோற்றத்தில் ஒலித்தது. கேட்பதற்கு மனதுக்கு இதமாகவும், திருப்தியாகவும் இருந்தது.
ஒரு தடவை நீங்களும் கேட்டுப் பாருங்களேன். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கின்றேன்.
1 comment:
super plz visit my blogger
http://ujiladevi.blogspot.com
Post a Comment