சஞ்சிகை வெளியீடும், அறிவியல் கருத்தரங்கும்

>> Friday, July 11, 2008

பத்திரிகை வெளியீடு, சஞ்சிகை வெளியீடு, புத்தக வெளியீடு, என்பன புலம் பெயர்ந்த மண்ணிலும் நிறையவே நடந்திருக்கிறது. செய்தவற்றையே மீளவும் செய்வதை, " சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லைக்க" எனும் ஒரு சொல்லாடல் மூலம் விமர்சிப்பது ஈழத்தில், அதிலும் யாழ்ப்பாணத்தில் வழக்கம். இங்க நடந்த, நடக்கும், பல வெளியீடுகளையும் அதே சொல்லாடக்குள் வைத்துவிடலாம். அத்திபூத்தாற்போல் எப்போதாவது இந்த எல்லை மீறப்படுவதும்முண்டு. அப்படியானதொரு மகிழ்ச்சியான மீறல்தான் "கணினிக்களம்" தொழில் நுட்பச் சஞ்சிகை.

"கணினிக்களம்" சென்ற ஏப்ரல் மாதத்தில் தனது முதலாவது இதழை வெளியிட்டிருந்தது. புதிய தொழில்நுட்பம் விரிந்து கொண்டு செல்லும் இக்காலத்தில், தமிழ்மொழி மட்டும் தெரிந்தவர்களுக்கு இது சற்று எட்டாக் கனியே. ஆனால் இந்த எட்டாக்கனியைத், தட்டிக் கனிய வைத்திருக்கிறார்கள் " கணினிக்களம்" தொழில் நுட்பச் சஞ்சிகை வெளியீட்டார்கள். புதிய தொழில்நுட்ப வெளியீடுகளை, படங்களுடன் விபரமாகவும். இலகுவாகவும்அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.

அந்தச் சஞ்சிகையின் இரண்டாவது இதழ் தற்போது வெளியிடலுக்குத் தயாராகிவிட்டது. அந்த வெளியீட்டை ஒரு விழாவாக முன்னெடுத்திருக்கிறார்கள். 19.07.08 சனிக்கிழமை, சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் நடைபெறவுள்ளது .அந்த விழாவில், ஒரு அறிவியற் கருத்தரங்கையும், ஒழுங்கு செய்துள்ளார்கள். இந்த முயற்சிகள் எம் சமூகத்திற்கு மிக அவசியமான முன்னெடுப்புக்களாகும். இவைகுறித்த மேலும் விபரங்களை இங்கே காணலாம்.

Read more...

  © Blogger templates by Ourblogtemplates.com 2008

Back to TOP